• May 05 2024

350 பெண்களுடன் உல்லாசமாக இருந்த விஜய் பட வில்லன் நடிகர்... வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தற்போது யூடியூபில் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவர் தான் பயில்வான் ரங்கநாதன். அந்தவகையில் முதலில் பத்திரிகையாளராகவும், நடிகராகவும் வலம் வந்த இவர் தற்போது யூடியூபில் ட்ரெண்டாகி வருகின்றார்.


அதாவது அதில் அவர் பல நடிகர் மற்றும் நடிகைகளின் காதல் மற்றும் அந்தரங்கம் குறித்த ரகசியங்களை கூறி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் பலர் அவரது வீடீயோவை எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது இவர் விஜய் பட வில்லன் நடிகர் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. அவரைப் பற்றியும் பல விடயங்களை புட்டுப் புட்டு வைத்து வருகின்றார். அதாவது விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பற்றித் தான் அவதூறாக பேசியுள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில், இந்தியில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வரும் சஞ்சய் தத், குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி அதிலிருந்து வெளிவந்தப்பின் போதைப்பழக்கத்திற்கு ஆளாகியதாகவும், பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது நான் 350 பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் எனவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

மேலும் "நடிகைகள் விலைமாதுக்கள் உட்பட பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை, நான் ஒரு ஆண் மகன்" எனவும் சஞ்சய் தத் கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement