• May 04 2024

'சுறா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்யே இல்லையாம்... என்ன இது புதுக்கதையாய் இருக்கு... அப்போ இது யாருக்காக உருவான படம்..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உச்சத்தில் இருந்து வருபவர் நடிகர் சிம்பு. வாரிசு நடிகரான இவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இருப்பினும் என்றுமே நடிப்பில் பின் வாங்கியது கிடையாது. தன்னுடைய திறமையின் காரணமாக இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார். 


இந்நிலையில் இவரின் நடிப்பில் நேற்றைய தினம் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படமானது முதலுக்கு மோசமின்றி வசூலை பெற்று வருவதோடு பல கலவையான விமர்சனங்களையும் ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகின்றது. இப்படமானது கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மூன்றாவது வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கின்றது.

அதாவது இதற்கு முன்பு 2015 இல் 'அச்சம் என்பது மடமையடா',  2010 இல் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என இதுவரை இவர்கள் இருவரும் இணைந்த மூன்று படங்களும் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை எடுப்பதற்கு முன்னர் அப்படத்தின் இயக்குநரான கவுதம் மேனன் சிம்புவிற்காக ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்த 'சுறா' எனும் தலைப்பில் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தாராம்.


எனினும் அப்போது சிம்புவிற்கு காதல் கதைக்களத்தை மையமாக கொண்ட ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்தாராம். இதன் காரணமாக சுறா தலைப்பில் உருவான கதையை ஒதுக்கி வைத்துவிட்டு 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை கவுதம் மேனன் இயக்கியதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் "சிம்புவிற்கான படத்தில் தான் பின்னர் விஜய் நடித்தாரா" எனக் கேட்டு வருகின்றனர்.


எது எவ்வாறாயினும் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு 'சுறா' எனும் தலைப்பில் விஜய்யின் 50வது திரைப்படம் உருவாகி வெளிவந்ததோடு, ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement