• May 05 2024

நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களைச் சந்தித்த விஜய்- இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குeராக வலம் வரும் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்த வருகின்றார்.இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.


இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் முடிந்த பிறகு தற்போது சென்னையில் இறுதிக்கட்ட ஷுட்டிங் ஆரம்பமானது.இதனை அறிந்த  500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய்யைக் காண சென்றுள்ளனர்.ஆனால் படப்பிடிப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் ரசிகர்களை விரட்டி அடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் இவ்வளவு பண்றது எதுக்கு, எங்க தளபதியை பார்க்க தானே. இப்படி பண்ணினால் எங்களுக்கு தளபதியே தேவையில்லை. சூர்யா, ரஜினி வந்தா மட்டும் அவரது ரசிகர்களை பார்க்க அனுமதிக்கிறாங்க. ஆனால், விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என்று ஆதங்கத்தை புலம்பி தள்ளியுள்ளனர். 


மேலும், சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்கள் அழைத்தது பெயரிலே பாதுகாப்புக்கு வந்த தங்களை பாதுகாப்பு ஆட்கள் தாக்க முற்படுவதாக வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறினர்.இதற்கிடையே ரசிகர்கள் அதிக அளவு கூடியதால் அப்பகுதி சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.

இந்தநிலையில், நேற்று சூட்டிங் முடிந்து விஜய் வீட்டுக்கு செல்லும்போது, ரசிகர்கள் ஏராளமானோர் விஜய்யை பார்க்க காத்திருந்தனர். இதனையடுத்து விஜய் காரில் இருந்து இறங்கி ரசிகர்களைச் சந்தித்தார். விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் காட்சியளித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதனை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement