• Apr 30 2024

'பிச்சைக்காரன் 2' தள்ளிப் போனதால் மன உளைச்சலுக்குள்ளான விஜய் ஆண்டனி... நீதிமன்றில் பதில் மனு தாக்கல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி தானே நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம் பிச்சைக்காரன்2. இப்படத்தில், காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


விரைவில் திரையரங்கில் வெளியாக இருந்த இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016 ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "பிச்சைக்காரன் 2 பட வெளியீட்டைத் தள்ளி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்" இயக்குநர் விஜய் ஆண்டனி உயர் நீதிமன்றத்தில் அந்தப் பதில் மனு அளித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது பிச்சைக்காரன் 2 படத்துக்கும் ஆய்வுக்கூடம் படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும், படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் விஜய் ஆண்டனி தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை வரும் ஏப்.25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement