• May 18 2024

பாரதிக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை உளறிய வெண்பா-கடைசியில் நடந்த ட்விஸ்ட்– இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 செல்வா மற்றும் துர்கா என இருவரும் என் பாரதிக்கு எதிராக செய்த வேலைகளை உடைக்க அடுத்து பாரதி கோபப்பட வெண்பா காலேஜில் படிக்கும் போது ஹேமாவை கொன்றதில் இருந்து கண்ணம்மா வீட்டுக்கு பிறந்த குழந்தைகள் வேறு யாருக்கோ பிறந்தது என நம்ப வைத்தது வரை வெண்பா செய்த சூழ்ச்சிகள் அனைத்தையும் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

எனக்கு பிடித்ததை நான் எடுத்துக்குவேன் அப்படி இல்லன்னா பிடிங்கிப்பேன் என சொல்கிறார்.


அத்தோடு எனக்கு வேணும் பாரதி என வெண்பா சொல்லிக் கொண்டிருக்க அப்போது போலீஸ் வந்து யார் போன் பண்ணது என கேட்க ஷர்மிளா நான் தான் உங்களுக்கு போன் பண்ணி பல கொலைகளை செய்த கொலையாளி வெளியில் சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கா என சொல்லி வெண்பாவை பிடித்துக் கொடுக்க அவள் இது ஒரு சின்ன பிரேக் தான் நான் திரும்ப வருவேன் என சொல்லி கிளம்புகிறார்.

இதனையடுத்து கதறி அழும் பாரதி தன்னுடைய அப்பாவை பிடித்துக் கொண்டு நான் அவளை ஒரு நல்ல பிரண்டா நினைச்சு தான் பழகினேன் ஆனால் என் வாழ்க்கையில ஏன் இப்படி எல்லாம் நடக்கணும் என அழுகிறார். இதனையடுத்து  கண்ணம்மாவிடம் சென்று கதறி அழுது மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார் பாரதி.


 அத்தோடு கண்ணம்மா எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement