• May 07 2024

வனிதா திருமணத்தால் வெடித்த சர்ச்சை... பிரபல சின்னத்திரை நடிகர் கைது.. வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வனிதாவுக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். 


அதாவது 2020 இல் வனிதா பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். அதாவது இவர் ஒரு திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருமணம் தொடர்பாக பிரபலங்கள் உட்பட பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.


அந்தவகையில் சூர்யா தேவி என்பவர் யூடியூப்பில் பல அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சூர்யா தேவி, வனிதா இருவருக்கும் இடையே மாறி மாறி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இவர்களின் இந்த சண்டையில் நாஞ்சில் விஜயன் என்பவரும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதில் அவர் வனிதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிய நிலையில், சூர்யா தேவிக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும் வெளியிட்டிருந்ததாக அப்போது சர்ச்சை கிளம்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 


மேலும் நாஞ்சில் விஜயனிடம் இது தொடர்பாக நேரடியாக கேட்பதற்கு சென்றிருந்தார் சூர்யா தேவி. அங்கு இவர்கள் இருவருக்கும் மற்றும் நாஞ்சில் விஜயனின் நண்பன் அப்பு ஆகிய மூவருக்கும் இடையே பயங்கர வாய்த் தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா தேவி அப்போதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். பதிலுக்கு நாஞ்சில் விஜயனும் புகார் அளித்திருந்தார். இதில் நாஞ்சில் விஜயன் மீது 5பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 


இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. ஆனால் நாஞ்சில் விஜயன் இதற்கு ஒழுங்காக ஆஜராகாமையால் இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement