• May 01 2024

சிம்புவே வலிய சென்று வாய்ப்பு கேட்டும் ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்.. காரணம் இதுதான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு வலிய சென்று இரண்டு பெரிய தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டும் சம்பளம் அதிகம் என்பதால் அந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் சிம்புவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும்எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் இந்த படப்பிடிப்பு தொடங்கவில்லை.



சமீபத்தில் வெளியான சிம்புவின் வீடியோஎஸ்டிஆர் 48’படத்தின் வீடியோ என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் அது ஒரு விளம்பர வீடியோ என்பதை அறிந்து சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும்எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவலும் இல்லை என்பதால் சிம்பு அதற்குள் வேறொரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரே வலிய சென்று சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு போன் செய்து நாம் சேர்ந்து ஒரு படம் செய்யலாம் என்று கூறியதாகவும் ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க இப்போதைக்கு எண்ணம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சிம்பு மேற்கண்ட அந்த இரண்டு தயாரிப்பாளர்களிடம் 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் அந்த அளவுக்கு சிம்புவின் படங்களுக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement