• May 10 2024

“த்ரிஷாட்ட அதை மட்டும் கேட்காதீங்க....” லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின். 14 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அத்தோடு  விஜய்யின் மனைவியாக நடிக்கிறார் த்ரிஷா என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிதாக வேலை இருக்காது. அதனால் முதல் காட்சியிலயே வில்லன்கள் த்ரிஷாவை கொலை செய்துவிடுவார்கள். அதற்காக விஜய் பழிவாங்குவது தான் கதை என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

முக்கிய வில்லனான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் த்ரிஷா. எனினும் அதை பார்த்த ரசிகர்களோ, உங்களை கொலை செய்யத் தான் அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அது கூட தெரியாமல் அவருடன் போய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என கிண்டல் செய்தார்கள்.

இப் படத்தில் த்ரிஷா கொலை செய்யப்படுவார் என்பதில் ரசிகர்களுக்கு துளி கூட சந்தேகமே இல்லை. ஆனால் இது தான் கதை என்று சொல்லும் ஆள் இல்லை லோகேஷ் கனகராஜ். அவர் எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றார்.

மேலும் படம் குறித்து யாரும் எந்த தகவலையும் கசியவிடக் கூடாது என படக்குழுவிடம் கறாராக கூறியிருக்கிறாராம் லோகி. இவ்வாறு தான் விருது விழாவுக்கு வந்த லோகேஷ் கனகராஜை பார்த்தவர்கள் லியோ அப்டேட் கொடுக்காமல் உங்களை இங்கிருந்து செல்லவிட மாட்டோம் என்று கூறி இருந்தார்கள்.

எஸ்கேப் ஆக முடியாது என்பதை புரிந்து கொண்ட லோகேஷ், இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. லியோ ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படம் என்றார். அதெல்லாம் சரி, லியோவின் கதை எல்.சி.யூ என்று கூறப்படுகிறதே, அது உண்மையா என லோகஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது.

அதற்கு லோகேஷோ, அது பற்றி மட்டும் கேட்காதீங்க. என்னிடம் மட்டமில்லை அடுத்ததாக த்ரிஷா வருவார். மேலும் அவரிடம் அதை பற்றி கேட்காதீங்கள். எதுவும் சொல்லக் கூடாது என்று நாங்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம் என்றார்.

எல்.சி.யூ.வாக தான் இருக்கும். இல்லை என்றால் எல்.சி.யூவில் இருக்கும் ஃபஹத் ஃபாசில் ஏன் லியோ படத்தில் நடிக்கிறார். நீங்கள் சொல்லாவிட்டாலும் நாங்களே கண்டுபிடித்துவிட்டோம் லோகி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் லோகேஷ். இதனை அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிப்பதற்கு பெயர் போனவர் லோகேஷ் கனகராஜ். அதனால் லியோ படம் கண்டிப்பாக அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதற்கிடையே தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியிருக்கிறார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமுக்கு வந்து 24 மணிநேரம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் அவரை 4 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஃபாலோயர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அந்த அதிசயத்தை பார்க்க விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் பலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement