• May 05 2024

சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பேசுபவர்கள் அறிவில்லாதவர்கள்- பேட்டியில் ஆவேசமாகப் பேசிய கங்கை அமரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மூத்த இசையமைப்பாளர் தான் இளையராஜா. இவர் 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பதோடு அண்மையில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டு ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவரின் கருத்தால், பல சர்ச்சைகளையும் சந்தித்தார்

இந்நிலையில், பிரபல இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனிடம் அவரின் அண்ணன் இளையராஜாவின் செயலைப்பற்றியும், அவர் வெளியிட்ட புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பற்றியும் பிரபல சேனலினால் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், உங்கள் அண்ணன் இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். அதனை தொடர்ந்து பிரதமரை பற்றி புத்தகமும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் இருக்கும் முன்னுரை நீங்கள் தான் உங்கள் அண்ணனுக்கு எழுதி கொடுத்திருக்கிறீர்கள் .? என்ற கருத்துகள் சமூக வலைத்தளத்தில் வெளிவருகின்ற இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு கங்கை அமரன், இந்நாள் வரை இளையராஜா இசையமைத்த அனைத்துமே நான் இசையமைத்தேன் என்று சொல்வீர்களா, சமூக வலைத்தளத்தில் கூறுவதை வைத்து பேசுபவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்கள், என்று கூறினார் . மேலும் இவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரை பார்த்து ஏய்.. என்னிடம் இனி நீ கேள்விகள் கேட்டதே என்று ஆவேசமாக பேசியுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement