• May 04 2024

திடீரென வெளிநாட்டிற்குப் பறந்த விஜய்... காரணம் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்துள்ள இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' படம் உருவாகி வருகின்றது. 


வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, ஷியாம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அத்தோடு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.

இப்படமானது வருகிற 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் தீபாவளி கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அதன்படி அவர் துபாயில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.


அந்தவகையில் இன்று காலை துபாய் செல்வதற்காக அவர் விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

பிஸ்கட் நிற பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் முகத்தில் கறுப்பு மாஸ்க் என படு சிம்பிளாக வந்த விஜய்யின் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.


தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடிய பின் விஜய் சில நாட்கள் துபாயில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பஉள்ளதாகவும், அதன்பின் வாரிசு படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை முடித்துவிட்டு, டிசம்பர் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement