• May 05 2024

பாகுபலியில் முதலில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணனே இல்லையாம்... அப்போ யார் தான் நடிக்க இருந்தாங்க..? அதற்கு காரணமும் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தனது 14-ஆவது வயதில் தமிழ் திரைப்படமான 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தார்.


அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அசத்தியதோடு பாலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இவரின் நடிப்பில் உருவான படங்களில் என்றுமே நம்மால் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது 'படையப்பா' தான். 


அதாவது சூப்பர் ஸ்டாரின் 'படையப்பா' படத்தில் தனது வேறொரு கோணத்தை வெளிக்காட்டி இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு மேலும் ஒரு மகுடமாய் அமைந்த படம் தான் ராஜமவுளியின் இயக்கத்தில் அமைந்த 'பாகுபலி'. படையப்பா படத்தில் எப்படி நீலாம்பரியாக வந்து பல ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டாரோ அதேபோன்று இந்த படத்திலும் சிவகாமி தேவியாக பார்ப்பவரை கவர்ந்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.


இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இதனையொட்டி 'பாகுபலி' படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது பாகுபலி படத்தின் ராஜமாதா ரோலுக்கு முதலில் நடிகை ஸ்ரீதேவியை  தான் படக்குழு அணுகுயுள்ளனர். 


ஆனால் ஸ்ரீதேவியோ அந்த ரோலில் நடிப்பதற்கு மட்டும் சுமார் ஆறு கோடி வரை சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் மறுத்து விட்டார்களாம். இதனையடுத்தே சிவகாமி தேவி ரோல் ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.


அதுமட்டும்லாது பாகுபலி பட்ஜெட் ஏற்கனவே மிக அதிகமாக இருந்ததால் மேலும் அதை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்த  இயக்குநர் ராஜமௌலி ரம்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். எனினும் இந்த படம் ஆனது ரம்யாவின் கரியரில் ஒரு மைல் கல்லாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement