• May 03 2024

விஜய் ஆண்டனிக்கு இப்படி எல்லாம் நடக்க காரணமே இதுதான்... பகீர் கிளப்பிய பயில்வான்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவாகி தனக்கென தனி பாணியில் பயணிப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அதில் 16வயதான மூத்த மகள் மீரா மன அழுத்தம் காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.


இவரின் திடீர் மறைவானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்த அதேநேரத்தில் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகவும் அமைந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்ற வேளையில் பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து ரசிகர்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

அந்தவகையில் பயில்வான் கூறுகையில் "விஜய் ஆண்டனி தனது 7 வயதிலேயே அப்பாவை இழந்த நிலையில் கூட கொஞ்சமும் திருத்தல" எனத் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது "அடுத்தடுத்து தனது படங்களின் தலைப்புகளை எமன், சைத்தான், கொலை, ரத்தம் என அபசகுணமாகத்தான் இன்றுவரை வைத்து வருகிறார். இந்தளவிற்கு நெகட்டிவிட்டி அதிகம் இருந்தால், வாழ்க்கையிலும் அது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.


அத்தோடு "இதன் காரணமாக தான் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார், பின்னர் தற்போது தனது மகளையும் இழந்து விட்டார்" என ஜாடை மாடையாக பயில்வான் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பயில்வானை திட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டனர். 

அதாவது தனது மகளை இழந்து ஒரு தந்தை தவித்துக் கொண்டிருக்கையில் சினிமா படங்களின் தலைப்புகளால் தான் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் சோகம் தொடர்கிறதுஎன்று எப்படிக் கூறலாம்" எனக்கேட்டு விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement