• May 08 2024

பிரபல நடிகரின் தாய் மாமன் மரணம்... காரணம் இதுவா... இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் நட்டி நட்ராஜ். பல முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் 2014-ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் வெளியான 'சதுரங்க வேட்டை' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த அறிமுகப் படத்திலேயே இவரின் வித்தியாசமான நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனமை குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்ற படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். இதில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து தனுஷின் 'கர்ணன்' என்ற படத்திலும் வில்லத்தனமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால் இவருக்கு அடுத்தடுத்தடுத்த படங்களிலும் வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்து வருகிறார் நட்டி நட்ராஜ். அதுமட்டுமல்லாது மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் 'பகாசூரன்' என்ற படத்திலும் நெகடிவ் ரோல் ஒன்றினை ஏற்று நடித்து இருக்கிறாராம். அதுதவிர 'இன்பினிட்டி, வெப், சம்பவம்' போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகின்றார்.


இவ்வாறாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கும் நட்டி நட்ராஜ், தனது தாய்மாமனின் இறப்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவு ஒன்றில் “Tiles(மாபிள்).. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்" எனக் கூறியிருக்கின்றார்.


மேலும் அவர் இப்பதிவில் "நம்முடய கௌரவம் மாபிளில் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருப்பது” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  இதைப்பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அனைவரும் நட்டி நட்ராஜ் அவர்களுக்கு தமது ஆறுதல்களினை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement