• May 05 2024

இது சக்காளத்தி சண்டை இல்லை ஒரு பொண்ணுக்கு நடந்த அநியாயம் சும்மா விடமாட்டோம்- பொங்கி எழுந்த அர்னவ் நண்பர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகிய கேளடி கண்மணி  மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, அர்னவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், முன்னதாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின.இதனைத் தொடர்ந்து தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அர்னவ் தன்னை அடிப்பதாகவும் செல்வம்மா சீரியல் அஞ்சிதாவுடன் தொடர்பில் இருக்கின்றார் என்றும் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டதாக பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.


அத்தோடு அவர் ஒரு சைக்கோ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.அத்தோடு இவரை இதுவரை யாரும் கைது செய்யவில்லை என்றும் இவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அர்னவ் மற்றும் திவ்யாவின் நண்பர்களான கருணா மற்றும் ரேகனா ஆகியோர் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ளனர். அப்போது கருணா கூறும் போது அர்னவ் பண்ணினது தான் தப்பு அர்னவ் வேலை இல்லாமல் இருக்கும் போது திவ்யா தான் பார்த்துக்கிட்டா என்று கூறினார். அத்தோடு அர்னவ் வீட்டில இருக்கிற அனைத்து பொருட்களுமே திவ்யா தான் வாங்கிக் கொடுத்தது. இதற்கு நாங்க தன் சாட்சி அர்னவ் மனச்சாட்சியோடு பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய ரேகனா திவ்யாவுக்கு சர்ப்போட் பண்றதால எங்களை பற்றி தப்பா பேசிறாங்க உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று கூறுகிறாங்க. ஆனால் ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடக்கும் போது நாம எப்படி பார்த்திட்டு இருக்க முடியும். அர்னவ் ஒரு பொண்ணை மதம் மாற்றி கல்யாணம் பண்ணி ஏமாற்றி இருக்கிறாரு. ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி இன்ஸ்டாகிராமில் அக்டீவாக இருந்து வருகிறாரு.

யாரு கொடுக்கிற தைரியம் இது திவ்யாவை அடிச்சிருக்காரு அந்த பொண்ணால முடில இதுக்கொரு தீர்வு கிடைக்கணும். அந்த பொண்ணு தனியா இருக்கல வயித்தில ஒரு குழந்தையை வச்சிருக்கிறா எப்படிங்க ஏமாத்த முடியும் அந்த பொண்ணு பாவம். அந்த பொண்ணுக்கு என்ன நடந்தது என்று கூட இருந்த எங்களுக்கு மட்டும் தான் தெரியும் நீங்க எதுவும் தெரியாமல் பேசாதீங்க. சும்மா எதுவும் தெரியாம கமெண்ட் போடுறவங்களுக்கு ஒன்று சொல்லிக்கிறேன். உங்க வீட்டில ஒரு திவ்யா இருந்தா நீங்க சும்மா இருப்பீங்களா. இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் நாங்க இதை விடப் போறதில்லை. அர்னவ் வீட்டில கட்டாயம் உண்ணாவிரதம் இருப்போம். எங்களை பற்றி தப்பான கருத்து பதிவிடுறவங்களோட சேனலை நீக்கிறதுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.இதற்கு ஒரு முடிவு கிடைக்கணும் என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement