தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் சமந்தா.இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் யசோதா. இப்படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது. ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். இதனால் இந்தப் படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் செய்வேன் என்று சமந்தா அடம்பிடித்துள்ளார். ஏற்கனவே இவர் டப்பிங் பேசிய மகாநதி படத்தில் இவரது குரல் கவனிக்கப்படவில்லையாம்.
இதனால் யசோதா படக்குழுவினர் வேறு யாராவது வைத்து டப்பிங் செய்யலாம் என்று நினைத்தனர்.ஆனால் சமந்தா அதற்கு ஒப்புகொள்ளவில்லை. இதனால் சமந்தாவுக்கும் படக்குழுவினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் யசோதா படம் வெளிவர தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறுப்படுகிறது. மேலும் சமந்தாவிற்கு நிறைய படங்களில் பாடகி சின்மயி தான் டப்பிங் செய்துள்ளார்.அந்த வகையில் தற்பாழுது இந்தப் படத்திற்கு யார் டப்பிங் பேசியுள்ளார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!