• May 02 2024

மாலையில் விஜய் இப்படித் தான் வீட்டிற்கு வருவான்... உண்மையைப் போட்டுடைத்த எஸ்.ஏ.சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் சமீபகாலமாக இடம்பெற்று வருகின்ற ஒரு சில கருது வேறுபாடுகளின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது விஜய் தனது பெற்றோரை விட்டு நீங்கி மனைவி, மகன், மகள் என தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.


அந்தவகையில் விஜய் இப்போது தனது மனைவி சங்கீதாவுடன் நீலாங்கரையில் தனியாக வசித்துவருகிறார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகிய இருவரும் அடையாறில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து விஜய்யையும், அவரது வீட்டையும் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது எஸ்.ஏ.சி கூறுகையில் "விஜய் பள்ளி முடிந்தவுடன் மாலையில், வீட்டின் முன் வாசல் வழியாக வர மாட்டார். பின் வழியாக சென்று, அங்கிருக்கும் ஒரு பைபிள் ஏரி, முதல் மாடிக்கு சென்று, அங்கிருந்து வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்" என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement