• May 01 2024

ஷூட்டிங்கின்போது மீனா இப்படித் தான் உடை மாற்றுவார்- ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்த நடிகர் ராஜ்கிரண்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மீனா. இவர் இதனைத் தொடர்ந்து  என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக கருதப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் .

குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த எஜமான், முத்து, வீரா போன்ற படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதிலும் முத்து படத்தில் மீனாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது . இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ரீல் ஜோடியாக 90களில் வலம் வந்தனர் ரஜினியும், மீனாவும்.


தொடர்ந்து நடித்து வந்த மீனா வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு நைனிகா என்ற பெண் பிள்ளையும் இருக்கின்றது.இவரது கணவர் அண்மையில் தான் இறந்தார்.இதனால் சில காலம் அமைதியாக இருந்த அவரை மற்றவர்கள் தேற்றினர். இதன் காரணமாக இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறார்.

அந்தவகையில் அவருக்கு சமீபத்தில் தனியார் ஊடகம் சார்பாக மீனா 40 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரைத்துறையில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவு பெற்றதால் அவருக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது.மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரண், " என் ராசாவின் மனசிலே படத்தில் மட்டும்தான் மீனா என்னை பார்த்து பயந்ததாக பலரும் நினைத்து கொண்டுள்ளனர்.


 ஆனால் நிஜமாகவே மீனா என்னை பார்த்து வெகுவாக பயந்தார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும்வரை அவர் என்னிடம் பேசவே இல்லை. அதேபோல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் மீனா. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடிக்க தயாராகிவிடுவார்.

 அப்போதெல்லாம் கேரவன் போன்ற வண்டிகள் கிடையாது. படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு முறை பாடலுக்காக ஆடையை மீனா மாற்ற வேண்டியிருந்தது. எதையும் யோசிக்காமல் மீனா உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தார். இப்போது உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement