• May 05 2024

எனக்கு இப்படித்தான் சீரியல் வாய்ப்பு கிடைத்தது... மனம் திறந்த ரியா விஸ்வநாதன்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'ராஜா ராணி சீசன் 2'. இதில் கதாநாயகனான சித்துவிற்கு ஜோடியாக முதலில் ஆல்யாமானசா நடித்து வந்தார். பின்னர் இவரிற்கு குழந்தை பிறந்ததன் காரணத்தினால் அவர் விலக, அவருக்குப் பதிலாக ரியா விஸ்வநாதன் புதிய சந்தியாவாக கமிட்டாகி நடித்தார்.


சிறிது காலத்தின் பின்னர் இந்த சீரியலில் இருந்து விலகிய ரியா விஸ்வநாதன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சண்டக்கோழி’ என்ற சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார் ரியா விஸ்வ நாதன்.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணலில் பல விடயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ரியா விஸ்வநாதன். அந்த வகையில் அவர் கூறுகையில் "நான் சென்னைப் பொண்ணு. எத்தி ராஜ் காலேஜ்ல டிகிரி முடிச்சேன். சின்ன வயசுல இருந்து டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். டான்ஸ் கிளாஸ் சேர்த்து விடுங்கனு வீட்டுல சொன்னப்போ, இப்போ சேர்த்து விடுறேன், அப்போ சேர்த்து விடுறேன்னு காலேஜ் வரை இழுத்துட்டாங்க. அதனால டி.வில பார்த்து நானே டான்ஸ் கத்துக் கிட்டேன். இப்போ மாடலிங், ஆக்டிங்னு எனக்கு பிடிச்ச வேலைகளை ரொம்ப ஜாலியா பண்ணிட்டு இருக்கேன்" என்றார்.


மேலும் "காலேஜ் படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஸ்டேஜ்ல டான்ஸ் ஷோ பண்ண ஆரம்பிச்சேன். அது மூலமா மாடலிங் வாய்ப்பு கிடைச்சுது. மாடலிங் மூலமா சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துல மக்கள்கிட்ட இருந்து நிறைய அன்பு கிடைச்சுருக்கு. இப்போ நான் ரொம்ப ஹேப்பி" எனவும் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement