• Apr 27 2024

50 ரூபாய் கொடுத்து வெளியே போ என மிரட்டி அனுப்பிட்டாங்க- நடிகர் மணிகண்டன் சொன்ன சோக கதை

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன்.இவருடைய கெரியரில் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான்  ஜெய் பீம். கடந்த 2021ம் ஆண் டு வெளியான இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் இந்த படத்திற்குப் பிறகு பெரும் வரவேற்பு பெற்றார்.இந்த படத்திற்கு பிறகுதான் அவரை ஜெய் பீம் மணிகண்டன் என அனைவரும் அழைக்க துவங்கினர். தற்சமயம் இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


 ஒரு பேட்டியில் மணிகண்டன் பேசும்பொழுது சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு நடந்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். முதன்முதலாக மணிகண்டன் சினிமாவிற்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவே அறிமுகமானார். படங்களுக்கு டப்பிங் செய்வதற்காகவே அவர் சினிமாவிற்கு வந்தார். அப்பொழுது ஒரு ஹிந்தி படத்தில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளை பெற்றார் .

அந்த ஸ்டுடியோவிற்கு டப்பிங் பேச செல்லும் பொழுது அங்கே கூறிய ஒரு வார்த்தையை மணிகண்டனால் சரியாக பேசவே முடியவில்லை. ஏனெனில் அவருக்கு டப்பிங் குறித்து முன் அனுபவம் எதுவும் இருக்கவில்லை. அந்த வசனத்தை மணிகண்டன் ஒழுங்காக பேசாத காரணத்தினால் அவரின் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்து இனி டப்பிங் ஸ்டுடியோ பக்கமே வந்து விடாதே! என அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.


அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக டப்பிங் எப்படி செய்வது என்பது பற்றி மட்டும் கவனம் செலுத்தி வந்த மணிகண்டன் அதற்குப் பிறகுதான் திரும்பவும் டப்பிங் செய்ய வந்துள்ளார். அப்பொழுதுதான் டப்பிங் செய்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை அவர் அறிந்து கொண்டதாக தனது பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement