• Apr 27 2024

பாக்கியராஜை பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிக்கும் ராதிகா- என்ன காரணம் தெரியுமா?- நீண்ட நாளுக்கு பிறகு வெளி வந்த ரகசியம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 80 களில் முக்கியமான இயக்குநராக வலம் வந்தவர் தான் பாக்கியராஜ்.இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அப்போதெல்லாம் பாக்கியராஜின் அலுவலகத்திற்கு முன்பு ஒரு பெரிய கூட்டமே வாய்ப்பு தேடி காத்து கொண்டிருக்கும் என பலரும் கூறியதுண்டு.

பாக்கியராஜ் நடித்து இயக்கிய படங்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி ஆகிய இரு திரைப்படங்களும் இப்போது வரை பிரபலமாக இருந்த படங்கள். தாவணி கனவுகள் திரைப்படமானது நடிகர் பாக்கியராஜுக்கும் முக்கியமான படமாக இருந்தது.


ஏனெனில் அந்த படத்தில்தான் முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடன் நடித்தார். சிவாஜி கணேசனிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள எனக்கு இந்த படம் உதவியாக இருந்தது என பாக்கியராஜ் ஒருமுறை தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராதிகா ஒரு பேட்டியில் கூறும்போது அந்த படத்தை குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார். தாவணி கனவுகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ராதிகா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பாக்கியராஜை பார்த்தாலே ராதிகாவிற்கு சிரிப்பு வந்துவிடுமாம்.


இதனால் ராதிகா முடிந்தவரை பாக்கியராஜை பார்க்காமலேயே நடித்துள்ளார். அந்த மொத்த படத்திலும் எந்த ஒரு காட்சியிலும் ராதிகா பாக்கியராஜை நேருக்கு நேராக பார்க்கவே மாட்டாராம். ஆனால் இது படம் பார்க்கும் பலருக்கும் தெரியாது என ராதிகாவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement