• May 03 2024

எனக்கு பதிலாக இவங்க வீட்டை விட்டு வந்திருக்கலாம்- முதல்முறையாக மனம் திறந்த ஆயிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ஆயிஷா வெளியேறியிருந்தார்.

அந்த நிலையில் இவர் விஜய் டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிக்பாஸ் பயணம் எப்படி இருந்தது என்று கேட்கும் போது கலவையான உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. இப்போ தானே வெளில வந்திருக்கிறேன்.அதனால் பெரிதாக எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.


மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிடித்த போட்டியாளர்கள் யார் என்று கேட்ட போது ஷிவின் மற்றும் மணிகண்டனைப் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் அசீம் நல்ல போட்டியாளர் அவருக்கு பிக்பாஸ் பற்றி நிறைய தெரிஞ்சிருக்கு அதனால சூப்பராக விளையாடிட்டு வருகின்றார் என்றார்.

மேலும் ஜி.பி முத்து குறித்து கேட்ட போது பிபி வீட்டுக்குள்ள அவர் இருக்கும் போது ரொம்ப ஹப்பியாக இருந்தது.அவர் வெளியே போனபோது எல்லாருக்குமே ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்றும் கூறினார்.

மேலும் ஜனனி நல்ல போட்டியாளர். அதே போல ரச்சிதாவும் விக்ரமனும் சேஃப் கேம் ஆடுற மாதிரி தான் இருக்கு காமெராவை பற்றி யோசிச்சு தான் இவங்க விளையாடுறாங்க.மேலும் மைனா நந்தினி வெளில இருக்கிற மாதிரி தான் வீட்டுக்குள்ளேயும் இருக்கிறாங்க என்று கூறினார். 


மேலும் எனக்கு பதிலாக யார் வீட்டை விட்டு வெளியேறுவாங்க என்று கேட்டால் அதற்கு பதில் என்கிட்ட இல்லை. ஏனென்றால் இது மக்கள் தீர்ப்பு. மக்கள் யார் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாங்களோ கண்டிப்பா அவங்க தான் வெளியேறனும். இந்த மக்கள் தீர்ப்பை நான் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றேன். அதே போல இத்தனை நாளாக எனக்கு சர்ப்போட் பண்ணிய எல்லாருக்கும் ரொம்ப நன்றி என்றும் ஆயிஷா தெரிவித்ததைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement