• May 03 2024

செட்ல பாதுகாப்பே கிடையாது- சீரியலில் இருந்து விலகியது ஏன்...அதிர்ச்சி காரணங்களை வெளியிட்ட மனிஷா…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் மனிஷா ஜித். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நம்மிடையே அறிமுகமானவர்.

மேலும் இந்தத் தொடர் 100-வது எபிசோட் நெருங்கியிருக்கும் வேளையில் மனிஷா அந்தத் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரே தான்ி வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

"முதல் நாளில் இருந்தே சம்பள பாக்கி இருந்தது. கொரோனா காலத்தில் கூட தொடர்ந்து ஒரு நாள் கூட லீவு இல்லாம நடித்தேன். ஆரம்பத்தில் செட்ல எல்லாரும் முழு தொகையை கேட்குறாங்க இப்ப என்கிட்ட பணப் பற்றாக்குறை இருக்கு என்று தயாரிப்பாளர் என்கிட்ட கேட்டதால பாதி பணம் இப்ப கொடுங்க… மீதியை கொஞ்ச நாள் கழிச்சு கொடுங்கு என்று சொன்னேன். ஆனா, அந்தப் பாதி பணத்தையே சொல்லி 10,15 நாள் இழுத்தடித்து தான் கொடுத்தாங்க. அதுக்கு பிறகு மீதிப் பணத்தை கேட்கும் போதெல்லாம் லேட் ஆகும்னு சொன்னாங்க. அவங்களுக்கு பாவம் பார்த்தது தப்பா போச்சு. அதுல இருந்து எனக்கு தொடர்ந்து பாக்கி இருந்துட்டே தான் இருந்துச்சு.

அத்தோடு நான் கேட்கும்போதெல்லாம் சேனலில் இருந்து இன்னும் பணம் கொடுக்கலை என்று சொன்னார். நான் சேனலில் கேட்டப்ப அதெல்லாம் கொடுத்தாச்சேன்னு சொல்றாங்க. இப்படி மாத்தி, மாத்தி ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டே இருந்தார். EMI மாதிரி தவணை முறையில் எனக்கு பணம் கொடுத்தார்.

எனக்கு உடம்பு சரியில்லாதப்ப கூட ஷூட் நிறுத்தினது கிடையாது. அதனைத் தொடர்ந்து ரெஸ்ட் இல்லாம நடிச்சு எனக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். அந்த செலவு 51,000 ரூபாய் கூட நான் தான் கட்டினேன். செட்ல லீவு இல்லாம நடிச்சதால தான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. இந்த செலவுக்கு அவங்க தான் பொறுப்பேற்றுக் கொள்ளணும்னு அந்த செலவுத் தொகையை மெயிலில் அனுப்பி வச்சிருந்தேன். அதுக்கு எந்த ரெஸ்பான்ஸூம் வரவில்லை. லீவு கொடுக்காம ஷூட் இருக்கு வந்துடுங்கன்னு சொல்லுவாங்க அப்போதெல்லாம் என் வேலையில் நேர்மையா இருக்கணும் என்று எதுவும் சண்டை போடாம நடிச்சுக் கொடுத்திருக்கேன்.

செட்ல பாதுகாப்பே கிடையாது. ஈஸியா ஷூட்டிங்கின் போது ஷாக் அடிக்கும்… ஆக்ஸிடென்ட் ஆகும்… ஆனாலும் அப்ப கூட நாம நடிச்சுக் கொடுத்துட்டு தான் ஓய்வெடுக்க போகணும். மேலும் அப்படித்தான் அந்த செட்ல எனக்கு நடந்துச்சு. அதெல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு நடிச்சிட்டு தான் இருந்தேன். காலை 9 மணியிலிருந்து நைட் 9 மணி வரை ஷூட்னு சொல்லுவாங்க.. ஆனா, பதினோரு மணி வரைக்கும் கூட போகும். என்னால எந்த இடத்திலும் ஒர்க் பாதிக்கப்படல. ஆஸ்பத்திரியில் 103 டிகிரி காய்ச்சலில் அட்மிட் ஆகியிருக்கேன்னு மெயில் பண்ணியும் மறுநாள் ஷூட்டிற்கு வரச் சொன்னாங்க. அங்க கொட்டும் மழையில் சீன் வச்சியிருந்தாங்க.

அத்தோடு அதுல கூட என் உடல்நிலையை பொருட்படுத்தாம நடிச்சேன். என் அசிஸ்டென்ட்டிற்கு கொடுக்க வேண்டிய பேட்டா, வந்து போகும் கேப் பில்னு எதுக்குமே அவங்க பணம் கொடுக்கல.இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் வரை சம்பள பாக்கி இருக்கு. எனக்கு பணம் செட்டில் பண்ணுங்க.. எனக்கு உடம்பு சரியில்ல நீங்க ரெஸ்ட்டும் கொடுக்க மாட்டேன்றீங்க.. வேற ஆள் பார்த்துக்கோங்கன்னு சொன்னேன். அப்ப கூட நீங்க தான் இந்த சீரியல் ஹீரோயின்.

நீங்க இல்லைன்னா டிஆர்பி போயிடும்னுலாம் சொன்னாங்க. சேனலில் உங்களை மாற்ற சம்மதிக்க மாட்டாங்கன்னு எல்லாம் சொன்னாங்க. இப்ப எனக்கு உடம்பு சரியாகிடுச்சு. நான் நல்லா இருக்கேன். சமீபத்தில் 100 -வது எபிசோட் நடிச்சிட்டு அங்கேயே கேக் எல்லாம் வெட்டி செலிபரேட் பண்ணினோம்.அத்தோடு அப்ப கூட வேற ஆள் பார்த்துட்டோம்னு அவங்க எதுவும் சொல்லலை. ஆனா, காலையில் அங்க போனதுமே எனக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்க நான் வீட்டுக்கு நடிச்சுக் கொடுத்துட்டு போன பின்னர் மெயில் பண்ணியிருந்தாங்க.

அதில், நீங்க ஹெல்த் இஸ்யூன்னு சொன்னதால உங்களை மாத்திட்டோம்.. சேனலில் வேற ஒருத்தரை ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டாங்கன்னு மட்டும் மென்ஷன் பண்ணியிருந்தாங்க. அதுவும் புரொடியூசர் அனுப்பல. மேனேஜர் தான் மெயில் அனுப்பியிருந்தார்.

மேலும் அப்படி உடம்பு முடியாம இருந்தா நான் ஏன் 100ஆவது எபிசோட் நடிச்சுக் கொடுக்கணும்? அங்கேயே ஷூட்டை நிறுத்தி பிரச்னை பண்ணி செட்டில்மென்ட் பணம் கேட்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ஆனா, அது எதுவும் நான் பண்ணல.. அமைதியா கிளம்பி வந்துட்டேன். மென்ட்டலி என்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கினாங்க.

எல்லாரும் நான் ஒரு சீரியல் கூட ஒழுங்கா நடிக்க மாட்டேன்..பிரச்னை பண்ணி விலகிடுவேன்னு குற்றம் சாட்டுறாங்க. கலர்ஸ் தமிழ் சீரியலில் நான் நடிச்சப்ப எனக்கு கொவிட் வந்துட்டு. அதோடு நடிச்சு மத்தவங்களுக்கும் அதை பரப்ப எனக்கு உடன்பாடில்லை. அதனால சீரியலில் இருந்து விலகினேன். நான் பிரச்னை பண்ணியிருந்தா அதே சீரியலில் மறுபடி கம்பேக் கொடுக்க சொல்லி எப்படி கேட்டிருப்பாங்க? நான் 'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடரில் இருந்து விலகியதுக்கு இது மட்டும் தான் காரணம்!" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement