• May 03 2024

அனுஷ்காவுக்கு இனி திருமணம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை- அதிர்ச்சித் தகவலைக் கூறிய பயில்வான்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா. இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி இவர் நடித்த அருந்ததி திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்தது.

இது தவிர பாகுபலி திரைப்படமும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் தேவசேனா என்கிற கேரக்டரில் நடித்திருந்த அனுஷ்கா, தன்னுடைய அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பாகுபலிக்கு பின் அவர் நடிக்க கமிட் ஆன இஞ்சி இடுப்பழகி என்கிற திரைப்படம் அனுஷ்காவின் கெரியரை டோட்டலாக காலி செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இப்படத்திற்காக உடல் எடையை கூட்டி குண்டான தோற்றத்துக்கு மாறிய அனுஷ்கா, பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். யோகா, உடற்பயிற்சி என எது செய்தாலும் அவரது உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கின. தற்போது அவர் கைவசம் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது. அதிலும் இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் .

தற்போது நடிகை அனுஷ்காவுக்கு வயது 40-ஐ கடந்துவிட்ட போதிலும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி பிரபாஸ் அனுஷ்காவை பிரேக் அப் செய்து பிரிந்ததற்கு காரணம், அவர் தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தான்.


 பிரபாஸ் உடன் திருமணம் வரை சென்று பின் பிரிந்ததால் மன வருத்தத்தில் இருந்த அனுஷ்கா மேலும் உடல் எடை கூடினார். அவருக்கு உடல் எடை அதிகரித்ததாலும், அவர் 6 அடிக்கு மேல் இருப்பதாலும் தான் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. தேவசேனாவாக அரியணை ஏறிய அனுஷ்காவுக்கு, இனி திருமண மேடை ஏறுவதற்கு வாய்ப்பில்லை” என்று பயில்வான் கூறி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement