• May 05 2024

விஜய்யை பற்றி இதுவரை யாருக்குமே தெரியாத பல விடயங்கள்.... அடடே அவரின் ரிங்டோன் கூடி இந்தப் பாட்டு தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தனது தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 65 படங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார். 


இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக 'வாரிசு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் யாவும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதோடு 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


இப்படத்தினை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். எனினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னமும் வெளியாகவில்லை.

இருப்பினும் விரைவில் படக்குழுவே 'தளபதி 67' அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறையும் நேர்காணலின் போது கூறி வருகிறார்.


இந்நிலையில் நடிகர் விஜய் குறித்த பல விஷயங்கள் நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவர் வாழ்க்கையில் இடம்பெற்ற இன்னும் ஒரு சில விஷயங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தளபதி விஜய்யை பற்றிப் பலருக்கும் தெரியாத தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அவை பின்வருமாறு...

தளபதி விஜய் ஒரு முறை வெளிநாட்டிற்கு சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கட்டியிருந்த கடற்கரை வீட்டை பார்த்து, அதனுடைய இன்ஸ்பிரேஷனில் தான், தன்னுடைய நீலாங்கரை கடற்கரை வீட்டை வடிவமைத்தாராம்.


தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'பில்லா' படத்தினுடைய 'மை நேம் இஸ் பில்லா...' என்ற பாடலை தான் நடிகர் விஜய் சில காலம் தன்னுடைய ரிங் டோனாக வைத்திருந்தாராம்.


எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் ஒரு காட்சியில் விஜய்யும் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது ரஜினியுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் கதைகள் கேட்பதற்காக விஜய் கட்டியுள்ள ஒரு அறையில் பெரிய ப்ரேம் போட்டு தொங்க வைத்துள்ளாராம் விஜய்.


அதேபோன்று தளபதி விஜய் நடித்த படங்களிலேயே 'வசீகரா' என்ற திரைப்படம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்த திரைப்படமாம்.


கொக்கா கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு, அதே Coca-Colaவை 'கத்தி' படத்தில் எதிர்த்து பேசியுள்ளீர்களே என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றார். அதற்கு விஜய் "செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன். நானும் சாதாரண மனிதன் தானே" என்று ரிப்ளை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக விஜய் பற்றி நமக்குத் தெரியாத விடயங்கள் பல உண்டு.

Advertisement

Advertisement

Advertisement