• May 18 2024

பட்டுப் புடவையில் ஜொலிக்கும் புன்னகை இளவரசி…அட என்ன ஒரு அழகு..! வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 'புன்னகை அரசி' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா. இவர் விஜய், அஜித், கமல்ஹாசன், மாதவன் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துப் புகழ் பெற்றவர். அந்தக் காலத்தில் சினேகாவின் பட வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர் கூட்டமோ ஏராளம். 'என்னவளே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் தொடர்ந்தும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இத்தம்பதியினரின் சிறந்த நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர். தற்போது தனது குடும்பத்தினருடன் சந்தோசமான முறையில் நேரத்தை செலவிட்டு வருகின்றார் சினேகா.

அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அவ்வப்போது வீட்டில் இடம்பெறுகின்ற விசேஷங்களை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றார். மேலும் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

அத்தோடு இவர் சமீபத்தில் தனது தந்தை ராஜாராமின் பிறந்தநாளை குழந்தைகள் காப்பகத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நடிகை சினேகா வீட்டில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தன.

இந்த நிலையில் தற்போது சினேகாவின் மற்றொரு புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது இவர் பட்டுப்புடவை ஒன்றினை அணிந்து அழகான மேக்கப்புடன் அட்டகாசமான அழகில் ஜொலிக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கொள்ளை அழகோடு ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement