• Apr 17 2024

ஆலியா பட்டிற்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கும் நயன்….அதுவும் இவ்வளவா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகின் வெற்றி நாயகியாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கின்றார். சினிமாவில் ஒரு முன்னணி எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்குமோ அதை விட அதிகளவான ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.

இவ்வாறாக பல இளைஞர்கள் மனதிலும் கனவு நாயகியாக வலம் வருகின்ற நயன்தாரா சமீபத்தில் தனது காதலனான விக்னேஷ் சிவனை கோலாகலமான முறையில் கரம் பிடித்துக் கொண்டமை நாம் யாவரும் அறிந்த ஒரு விடயமே. திருமணத்தை தொடர்ந்தும் கணவன், மனைவி இருவரும் தமது தொழில்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நயன்தாராவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நம்ம நயன் தமிழ் சினிமாவைத் தாண்டி இவர் விரைவில் பாலிவுட் திரையுலகிற்குள்ளும் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அப்படத்தினைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது அவரின் 75-ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அப்படத்தினை நிலேஷ் கிருஷ்ணா இயக்கவிருக்கின்றார்.

இதற்கிடையே தற்போது இப்படம் தொடர்பான மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது அந்தப் படத்திற்காக நயன்தாரா வாங்கவுள்ள சம்பளம் குறித்த வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் அப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ. 10 கோடியை சம்பளமாக கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பாலிவுட் திரையுலகைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் மட்டுமே 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் முதல்முறையாக நம்ம நயன்தாரா தான் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா எனப் பெருமையுடன் கூறி வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement