• May 06 2024

மீண்டும் இடை நிறுத்தப்பட்ட வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு- கடும் குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் வணங்கான். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

அத்தோடு இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது மார்ச் மாத இறுதியில் கன்னியாகுமரியில் நடத்தப்பட்டு வந்தது. அங்கு ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற ஷூட்டிங் கடந்த மே மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.

சூர்யா - பாலா இடையே ஏற்பட்ட மோதலால் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பாலாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜூலை மாதம் கோவாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தனது மகளின் படிப்பு தொடர்பாக ஒரு மாதம் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வணங்கான் பட ஷூட்டிங்கை தள்ளிவைத்தார் சூர்யா. கடந்த வாரம் இந்தியா திரும்பிய அவர் விருமன் பட ரிலீஸில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இது முடித்த பின்னர் அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதன்படி சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இதன் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்த பின்னரே வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement