• May 06 2024

அப்பாவையும் அக்காவையும் துடிக்கத் துடிக்க கொலை செய்த நடிகையின் மகன்.. எதனால் தெரியுமா.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இசைப் பயிற்சி ஆசிரியரான செல்வராஜ் மற்றும் துணை நடிகையான சாந்தி தம்பதியினருக்கு செல்வராஜுக்கும் சாந்திக்கும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் இளைய மகன் பிரகாஷ் மட்டுமே அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது தந்தை செல்வராஜையும், அக்கா பிரியாவையும், பிரகாஷ் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார் தப்பியோடிய பிரகாஷை கைது செய்தனர்.


இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். அந்தவகையில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வசதியாகவும் நல்ல மதிப்பு மரியாதையுடனும் அந்தப் பகுதியில் இருந்து வந்துள்ளார். அத்தோடு அவர்களின் வீட்டில் உள்ள அனைவருமே படித்துவிட்டு நல்ல வேலையில் வசதியாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பிரகாஷ் மது மற்றும் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நோய் முற்றிலும் குணமாகாததால் பிரகாஷ் அடிக்கடி தனிமையில் பேசிக் கொண்டிருந்ததோடு தன் குடும்பத்தில் இருப்பவர்களிடமும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளார். 


இதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பது குறித்து, அவரது அம்மாவும், அக்காவும் கடந்த வாரம் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை ஒழிந்து கொண்டு ஒட்டுக் கேட்ட பிரகாஷ் கடும் கோபம் அடைந்துள்ளார். தன்னை வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்க்க திட்டமிடுவதாக அவர் நினைத்தார்.

அதன் பின்பு தான் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவத்துள்ளார். அந்தவகையில் முதல் கட்டமாக அம்மாவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். ஆனால் அவர் மருந்து வாங்க சென்றதால் நல்ல வேளை தப்பிவிட்டார். அவர் வெளியே சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரகாஷ், தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜை கழுத்தை அறுத்து கொன்றதாக கூறியிருக்கிறார்.


பின்னர் நேராக தனது அக்கா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு வைத்து தனது அக்காவின் மாமியார் கண்ணெதிரிலேயே அவரையும் கத்தியால் தாறுமாறாக குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக பல திடுக்கிடும் தகவல்களை பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து பிரகாஷுக்கு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் பிரகாஷ்.

Advertisement

Advertisement

Advertisement