• May 04 2024

சந்தானத்தின் அப்பா இப்படிப் பட்டவரா..? வெளியான ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர். அவரது ஸ்டைலையும் நகைச்சுவை வசனங்களையும் ரசித்த பல தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் கண்டிப்பாக சந்தானம் தான் நடிக்க வேண்டும் என ஏங்கி இருக்கின்றார்கள்.


காமெடியனாக ககலக்கி வந்த சந்தானம் தற்போது நாயகனாக தன்னுடைய ட்ராக் ஐ மாற்றி இருக்கின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாசூம் சங்கர், ஃபெசி விஜயன்,  மாறன், பிரதீப் ராவத், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் எனப் பலரும் நடிக்கின்றனர்.

இப்படமானது நாளை (ஜூலை 28) தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சந்தானம் தனது தந்தை குறித்துப் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு காரணமே தன்னுடைய தந்தை தான் எனக் கூறியுள்ளார்.


அதாவது தன்னுடைய அப்பா எப்பவுமே ஜாலியாக இருக்கின்ற ஒருவர் எனவும்,  எம்ஜிஆர் மற்றும் தங்கவேலுவின் தீவிர ரசிகர் எனவும், அவர்கள் நடித்த படங்களை தனக்கு அடிக்கடி போட்டுக் காட்டுவார் எனவும் கூறியிருக்கின்றார். மேலும் எனக்கு படிப்பு, பணத்தை விட ஆன்மீகத்தைத்தான் அப்பா அதிகமாக கொடுத்தார் அதனால் தான் நான் சந்தோசமாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். 


என்னுடைய படங்களில் காமெடி காட்சிகளில் அதிகமாக நான் பயன் படுத்துகின்ற வசனங்கள் அப்பாகிட்ட இருந்து எடுத்துக்கிட்டது தான்.  என் பெற்றோருக்கு நான் ஒரே பையன்" என்றார். அதோடு ஒருதடவை தன்னுடைய தந்தை தன்னைப் பார்த்து ஊர்ல 10,15 புள்ள வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருப்பதாகவும், ஒன்னே ஒன்னு வச்சிகிட்டு தான் கஷடப்படுவதாகவும் கூறி இருப்பதாகவும் சந்தானம் தெரிவித்திருக்கின்றார். இதனை படத்தில் தான் ஒரு டயலாக்காக மாற்றி பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "அப்பா எனக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்தே ஆன்மிகம் தான். இத்தனை காலமாக என்னை வழிநடத்தி வருவதும் அதுதான்" என தனது தந்தை குறித்துப் பெருமையாக பேசியுள்ளார் சந்தானம்.

Advertisement

Advertisement

Advertisement