• May 06 2024

மேக்னாவைப் பார்க்க வந்த தமிழுக்கு காத்திருந்த அதிர்ச்சி- பயத்தில் திணறிய நமச்சி- சந்தோசத்தில் கோதை- Thamizhum Saraswathiyum Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் வீட்டில் ஆடரை செய்து முடிக்கவில்லையே என எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் உமாபதியிடம் எல்லோரும் நடந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது உமாபதி நான் கம்பெனி வைத்திருப்பதாக சொன்ன முதலாளியும் இன்னும் வெளிநாட்டுக்குப் போகல அவரைப் போய் பார்த்தீங்க என்றால் சரி ஆகிடும் என்கின்றார்.


அத்தோடு நாளைக்கு நீங்க அவங்க ஊருக்கு போனால் கூட இந்த பிரச்சினைக்கு முடிவு வந்திடும், அந்த ஸ்டேட்லையே மேக்னா என்ற சின்ன பொண்ணு தான் கம்பெனியை நடத்திட்டே வருகின்றா,அந்த கம்பெனில ஒரு முக்கிய ஆளாத் தான் இவர் இருக்காரு, இவர் கிட்ட போய் பேசினால் எல்லாம் சரி ஆகிடும் என்கின்றார்.இதனால் வீட்டில் இருக்கும் எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.

தொடர்ந்து மேக்னா என்ட்ரி பற்றி காட்டப்படுகின்றது. அப்போது மேக்னா தன்னுடைய வீட்டுக்கு வருகின்றார். அந்த நேரம் வாட்ச்மேன் கதவை மூடி வைத்திருப்பதால் காரால் இறங்கி வாட்ச்மேனை அடிக்கின்றார். பின்னர் அவருடைய அம்மா என்னால் தான் அவன் கதவு திறக்க லேட் ஆகி விட்டது என்று சொல்ல மன்னித்து விடுகின்றார்.


பின்னர் மேக்னா வீட்டுக்குள் சென்றதும் அவரது மாமா தன்னுடைய பையனுக்கு பிஸ்னஸ் பண்ண ஏதாவது கெல்ப் பண்ணுமாறு கேட்க மேக்னா அதெல்லாம் முடியாது என்று மறுத்து விடுகின்றார். பின்னர் தன்னுடைய அம்மா கேட்டுக் கொண்டதால் அவன் பிஸ்னஸ் ஆரம்பிக்க  ஓகே சொல்கின்றார். 


தொடர்ந்து மேக்னா ஏர்போட்டிற்கு வரும் போது நமச்சி அவர் மீது தெரியாமல் மோதி விட நமச்சி மன்னிப்புக் கேட்கப்போக மேக்னா ஓங்கி அறைந்து விடுகின்றார். அப்போது தமிழ் நமச்சியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கின்றார். இருந்தாலும் அவர் மன்னிப்புக் கேட்காததால் தமிழ் மேக்னாவை ஓங்கி அடிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement