• May 04 2024

விஜய்யுடன் நடித்த காட்சியை சொல்லாமலேயே நீக்கி விட்டார்கள்- திருச்சிற்றம்பல நடிகையின் ஓபன் டாஃக்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய்யுடன் நடித்த படத்தில் முதல் சீனே விஜய்யுடன் ஆட்டோவில் பயணிக்கும் ஒரு காட்சி, ஆனால் அதை எடிட்டிங்கில் விக்கி விட்டார்கள் என கவலை தெரிவித்த நடிகை ஸ்ரீ ரஞ்சினி.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


 இந்த நிலையில் விஜய்யுடன் நடித்தது குறித்து பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ள விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனுக்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. 

இவர் இது தவிர பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகின்றார்.மேலும் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் கதையையே கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன். நித்யா மேனன் படப்பிடிப்பில் நீங்கள் எனது அம்மா போலவே உள்ளீர்கள் என கூற மிகவும் சந்தோஷப்பட்டேன்.


ஆனால்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பேச வேண்டும் என கூற தெலுங்கில் வசனங்கள் பேச மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்றார்.அத்தோடு விஜய்யுடன் இணைந்து உதயா படத்தில் தான் முதன்முதலில் நடித்தேன். அதன்பிறகு போக்கிரி படம் நடித்தேன். இன்னொரு படத்தில் முதல் சீனே விஜய்யுடன் ஆட்டோவில் பயணிக்கும் ஒரு காட்சி, ஆனால் அதை எடிட்டிங்கில் விலகியிருக்கிறார்கள்.

திரையரங்கம் சென்று பார்க்கும் போது காட்சி இல்லை, நமக்கு சொல்லாமலேயே நீக்கிவிடுகிறார்கள், அது வருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement