• May 10 2024

விக்ரமனுக்கு மாலை அணிவித்து கௌரவித்த துப்பரவுத் தொழிலாளர்கள்- அசீமை வைச்சு செய்த ஷிவின் மற்றும் ரச்சிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டியில் ஒளிபரப்பாகிய  பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது.21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார்.இரண்டாம் மூன்றாம் இடத்தை விக்ரமன் அசீம் ஆகியோர் பெற்றனர்.

மேலும் முதல் பட்டத்தை வென்ற அசீமுக்கு  50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தியாக இருக்கின்றனர்.மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர். 


அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் பிக் பாஸ் முடிந்ததில் இருந்தே விக்ரமன் தோற்றதை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.மேலும் அசீம் டைட்டில் வெற்றி பெற்றது மகேஸ்வரி,ரச்சிதா போன்றவர்களுக்கே பிடிக்கவில்லை.பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தாலே பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.

 அந்த வகையில் இந்த சீசனுக்கான பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது அதில் விக்ரமனை துப்புரவு தொழிலாளிகள் சந்தித்து மாலை அணிவித்து அவருக்கு மகுடம் சூட்டி பாராட்டு தெரிவித்து இருந்தார்கள்.விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார்.


அதிலும் குறிப்பாக மனித கழிவுகளை மனிதனே அல்லும் அவலம் குறித்து நாடகம் ஒன்றை விக்ரமன் நடித்துக் காட்டி இருந்தார். அந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அந்த இதனால் தான் துப்புரவு தொழிலாளிகள் பலரும் விக்கிரமனை கொண்டாடினார்கள். ஆனால், விக்ரமன் இப்படி பாராட்டு பெறுவதை பார்த்த அசீம் மற்றும் தனலட்சுமி மட்டும் எந்த ஒரு ரியாக்சனையும் கொடுக்காமல் இருந்தார்கள். அப்போது அருகில் இருந்த ஷிவின் மற்றும் ரச்சிதா இருவரும் அசீமை வெறுப்பேற்றுவது போல கூச்சலிட்டு சைகை செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement