• May 06 2024

என் எஞ்சியுள்ள வாழ் நாட்கள் மக்களுக்காகவே இருக்கும்- வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

stella / 8 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில்  களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் கமல்ஹாசன். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப“பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

மேலும் இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து, இவர் நடித்த மூன்று முடிச்சி, அவர்கள், 16 வயதினிலே, ராஜ பார்வை,போன்ற படங்கள் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவே இருக்கின்றன.


நடிகர் என்பதைத் தாண்டி கமல்ஹாசன் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குகின்றார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.திரையுலகில் அரை நூற்றாண்டு கண்ட நடிகராக இருக்கும்  கமல்ஹாசனுக்கு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதனால் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக.… என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement