• May 01 2024

'காபி வித் கரண்' நிகழ்ச்சிக்கு டாப்ஸியை அழைக்காமைக்கான காரணம்... உண்மையை போட்டுடைத்த கரண் ஜோகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியாக 'காபி வித் கரண்' நிகழ்ச்சி அமைந்து காணப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டில் பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது கடந்த ஆறு சீசன்களாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்தது. 


அந்தவகையில் இதன் ஆறாவது சீசன் ஆனது 2019 இல் நிறைவடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஏழாவது சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியும் களை கட்டி வருகின்றது. 


கரண் ஜோகரின் இந்த நிகழ்ச்சிக்கு என்றைக்குமே சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது. கிசுகிசுக்களுடன் வேடிக்கை நிறைந்ததாக அமைந்திருக்கும். 

விஜய் தேவர்கொண்டா, கரீனா கபூர், சமந்தா என பல நட்சத்திரங்களும் கலந்து சிறப்பித்திருந்த இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் டாப்ஸி கலந்து கொள்ளவில்லை. 


இதுதொடர்பாக கரண் ஜோகரிடம் பேட்டி ஒன்றின் போது கேட்கப்பட்டது. அதாவது "விமர்சன ரீதியாக பாராட்டப்பெற்ற டாப்ஸி போன்ற கலைஞர்கள் ஏன் ஏழாவது சீசனில் பங்கேற்கவில்லை" என்ற கேள்விக் கணை தொடுக்கப்பட்டிருந்தது.


இதற்குப் பதிலளிக்கையில் "இது வெறும் 12 எபிசோட்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியாகும். டாப்ஸி போன்றவர்கள் அற்புதமான கலவையை உருவாக்க கூடியவர்கள். அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தால் அவர்கள் வர மாட்டார்கள்" எனக் கூறியிருக்கின்றார் கரண் ஜோகர்.

மேலும் "அப்படி டாப்ஸி வர மறுத்து விட்டால் அதற்காக நான் வருத்தப்படுவேன்" எனவும் கூறியிருக்கின்றார் கரண் ஜோகர்.

Advertisement

Advertisement

Advertisement