• May 02 2024

பத்திரிகையாளர் கேட்ட அந்தக் கேள்வி; பதில் சொல்ல முடியாமல் நின்ற அருண் விஜய்

tech / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "முறை மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். அறிமுக படத்தை தொடர்ந்து தனது திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும் எப்போதுமே இவர் தன்னுடைய விடாமுயற்சியை கைவிட்டதில்லை.

எனினும் தொடர்ந்து 'பிரியம், இயற்கை, பாண்டவர் பூமி, கங்கா கௌரி' எனப் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் தல அஜித் உடன் இணைந்து நடித்திருந்த 'என்னை அறிந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான ரீச்சை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இதன் மூலமாக 'குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், சகோ' என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுக்கத் தொடங்கினார்.

இந்தநிலையில் தற்போது ஹரியின் இயக்கத்திலும் அருண் விஜய்யின் நடிப்பிலும் 'யானை' என்ற படம் வெளியாகி உள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைக் கதைக்களமாகக் கொண்டமைந்த இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படமானது இதுவரை உலகம் முழுவதும் 5.5 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 4.6 கோடியையும், கேரளாவில் 1 கோடி ரூபாயையும் வசூலாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் "படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது எனப் பேசியுள்ள நீங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே, அவரை சேர்த்துக் கொள்வீர்களா" எனக் கேள்வி ஒன்றினைக் கேட்டிருக்கின்றார்.

நடிகர் விஜயகுமாரின் குடும்ப உறுப்பினர் அனைவரும் நடிகை வனிதா விஜயகுமாரை ஒதுக்கி வைத்துள்ளமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இவர்களுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற சச்சரவுகள் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் முடிவிற்கு வந்த பாடில்லை.

இவ்வாறாக இருக்கும் போது பத்திரிகையாளர் கேட்ட அந்தக் கேள்வியினால் அருண் விஜய் ஆடிப்போயிருக்கின்றார். அதற்கு பதில் எதுவும் கூறாமல் 'ம்ம்" என மட்டும் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கின்றார் நம்ம அருண் விஜய்.

Advertisement

Advertisement

Advertisement