• May 07 2024

இயக்குநர் பாலாவை மலையில் இருந்து தள்ளவிட போடப்பட்ட திட்டம்...பரபரப்பு தகவலை வெளியிட்ட பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  தரமான படைப்புகளின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் பாலா. அத்தோடு இவரது படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது என்றாலும் திரைவாழ்க்கையில் பாலாவின் மீது பல சர்ச்சைகள் எழுந்துள்ள வண்ணம் உள்ளது. நடிகர்களுடன் மோதல், தயாரிப்பாளர்களுடன் மோதல் என பாலா பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். பிறர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் இஷ்டத்துக்கு தான் பாலா படமெடுப்பார் என இவரின் மீது பலர் குற்றம்ச்சாட்டியுள்ளனர்.எனினும் சமீபத்தில் பிதாமகன் படத்தை தயாரித்த துரை படுத்த படுக்கையில் பாலாவின் மீது பல புகார்களை முன்வைத்தார்

வர்மா படத்தின் மூலம் விக்ரமிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் மோதல் வெடித்தது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர்  படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்த பாலாவிற்கு வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்தார் சூர்யா.அத்தோடு  தன்னை ஒரு நடிகராக தமிழ் திரையுலகில் முன்னிறுத்திய பாலாவிற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக சூர்யா பாலாவை வைத்து படமெடுக்க முடிவெடுத்தார். ஆனால் பாலா மீண்டும் தன் வேலையை காண்பிக்க துவங்கினார். இதனால் சூர்யா மற்றும் பாலவிடையே மோதல்கள் வெடித்தன. இதன் காரணமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார். எனினும் இதையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்துள்ளார் பாலா


இவ்வாறுஇருக்கையில் தமிழ் திரையுலகில்  பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த துரை பாலாவின் பிதாமகன் படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். அதில் இருந்து தான் அவருக்கு பிரச்சனையே ஆர்மபித்தது எனலாம். சொன்ன பட்ஜெட்டை விட பாலா பிதாமகன் படத்தை பல மடங்கு அதிகமாக இழுத்துள்ளார். இதன் காரணமாக துரை கடனாளியானார். என்னதான் பிதாமகன் திரைப்படம் நடிகர்களுக்கும் , பாலாவிற்கும் பெயர் வாங்கி கொடுத்தாலும் துரைக்கு நஷ்டத்தையே தந்தது. இதற்கு முழுக்க முழுக்க பாலவே தான் காரணம் என துரை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பாலா மேலும் ஒரு படத்தை இயக்கி தருவதாக கூறி துரையிடமிருந்து 25 லட்சம் முன்பணமாக வாங்கியதாகவும் கூறியுள்ளார் துரை

பிதாமகன் படத்தின் கதை விவாதத்தின் போது பாலா துரையைஇழுத்தடித்துள்ளாராம். மிகப்பெரிய ஹோட்டலில் ரூமை புக் செய்து கதையை தயார் செய்வதாக கூறினாராம் பாலா. பல மாதங்கள் ஆகியும் பாலா கதையை கூறாததால் அவரை பார்க்க துரை ஹோட்டலுக்கே சென்று கதையை கேட்டுள்ளார்.


 அதற்கு பாலாவோ, கதையெல்லாம் என்னால் கூற முடியாதென கண்டிப்பாக தெரிவித்துவிட்டாராம். இதன் காரணமாக கடுப்பான துரை அவரின் நண்பரிடம் இதனை கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தயாரிப்பாளரான துரை வரக்கூடாது என கண்டிஷன் போட்டாராம் பாலா. இதனால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான துரை ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாலா மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தார். உடனே துரையும் அவரது நண்பரும் பாலா செய்யும் டார்ச்சரை நினைத்துக்கொண்டு இவரை அங்கிருந்து தள்ளிவிடலாம் என நினைத்தார்களாம். அந்த சமயத்தில் பாலா துரையை பார்த்தவுடன் நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் நான் படமெடுக்கமாட்டேன் என சொல்லி அவர்களை அனுப்பிவிட்டாராம். இதை வலைப்பேச்சு அந்தணன் வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement