• May 07 2024

போட்டி நிகழ்ச்சியில்... பாக்ஸராகி திடீரென ஓங்கி குத்த ரெடியான ரோஜா... பதறிப்போன அதிகாரிகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரோஜா. அதுமட்டுமல்லாது அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர், கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ரோஜா, தனது அடுத்த ராக்கெட்டான அரசியலில் களமிறங்கினார். அந்தவகையில் முதலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சியில் இருந்த இவர், அதனைத் தொடர்ந்து பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். 

அக்கட்சியின் சார்பில் 2 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகண்டு எம்.எல்.ஏ ஆனார். மேலும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. அந்தவகையில் இவர் தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்து வருகிறார். 


அமைச்சரான ரோஜா அரசு சார்பில் நடத்தப்படும் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக அங்கு செல்வது உண்டு. குறிப்பாக கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றால் அங்குள்ள வீரர்களுடன் களத்தில் இறங்கி கபடி விளையாடுவது, ஏதேனும் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சென்றால் அங்குள்ளவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது என மக்களோடு மக்களாக பழகி வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ரோஜா சென்றிருந்தார். அந்த சமயத்தில் சட்டென கிளவுஸை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி ஜாலியாக ஓங்கி குத்தும் வகையில் பாக்ஸிங் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதனைப் பார்த்து அங்கிருந்த அமைச்சர்கள் கூடி ஆச்சர்யமடைந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement