• May 04 2024

ரேவதியின் வளர்ச்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய காரணம். கொஞ்சமாவது ஜோசிச்சு இருக்கலாம்.

ammu / 1 year ago

Advertisement

Listen News!

1980களில் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் அழகு தேவையாகவும்  திகழ்ந்தவர் ரேவதி. இவரது நளினத்துக்கும் சிரிப்புக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவரை பற்றி தெரியாத ஆளே இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரசித்தி பெற்றவர்.


இவர் தமிழ் திரையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், முரளி, கார்த்திக், பிரபு போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த ஹிட்டான இந்திய நடிகையாகவும் திகழ்ந்தார்.


ரேவதி மிக ஹிட்டான நடிகையாக வளர்ந்து வந்துகொண்டிருந்த சமயத்தில் மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.


இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர், ரேவதியின் வளர்ச்சி ஏன் தடையானது? ரேவதி சினிமாத் துறையில் தொட்டிருக்க வேண்டிய உயரத்தை குறித்து ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.



அந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன், “மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே ரேவதி திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணமே அவரின் வளர்ச்சி தடைபட்டதற்கு முதல் காரணமாக இருந்தது. ஆனாலும் திருமண வாழ்க்கையிலும் அவருக்கு சரியான நிலை அமையவில்லை.


அதற்கு பின்னால் நடிப்புத் துறையில் முழு கவனத்தை செலுத்தாமல் டைரக்சன் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதுவும் அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியாததற்கு ஒரு காரணம்” என்று அதில் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் சமீபத்தில் ஜோதிகாவுடன் ஜாக் பாட் திரைப்படத்தில் நடித்து நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement