• May 18 2024

நடிகை பார்வதி வீட்டில் நடந்த சம்பவம்- தீவிர விசாரனையில் போலீசார் ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்பவர் தான் பார்வதி நாயர்.இவர் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர்.

இவ்வாறுஇருக்கையில்  சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த நபர் அதிக விலை மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றுள்ளதாக நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகாரின்படி, ரூ.6 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி,செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று உள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 


அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம் போலீசார்  தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement