பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் மொத்தமாக 21 பேர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகி விட்டதோடு பரபரப்பிற்கும் சண்டைக்கும் குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தனது வெள்ளந்திக் குணத்தாலும் காமெடி கலந்த பேச்சினாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் ஜி.பி முத்து ஆனால் அவர் தனது பிள்ளைகளின் நினைவாகவே இருக்கின்றது.பணம் புகழை விட எனக்கு குடும்பம் தான் முக்கியம் என இந்த நிகழ்ச்சியிருந்து வெளியேறினார்
இதனை அடுத்து இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து சாந்தி மாஸ்டர் எவிக்டாகி வெளியில் சென்றார். இவர் வெளியேறியது ரசிகர்களுக்கும் சோகத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் இவர் தற்பொழுது வீட்டுக்கு சென்றபோது எல்லோரும் ஆரார்த்தி எடுத்து வரவேற்றுள்ளனர். இது குறித்த வீடியோவை சாந்தி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சாந்தி மாஸ்டர் தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக இருப்பதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!