• May 01 2024

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமே இன்னும் பார்க்கல- உண்மையை உளறிய நடிகர் பார்த்திபன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இதனை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழ நேற்று நடைபெற்றது.இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பார்த்திபன், "பொன்னியின் செல்வன் முதல் பாகமே இன்னும் பாக்கல. 

அதனால் பார்ட் 2 எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தஞ்சாவூரில் முதல் நாள் முதல் காட்சி பாக்க ஆசைப்பட்டு சென்ற போது ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டேன். இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி & பெருமை. முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது."  என பார்த்திபன் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement