• May 05 2024

அருள் நிதியின் “திருவின் குரல்” - வெளியாகியது முதல் பார்வை

ammu / 1 year ago

Advertisement

Listen News!

அருள்நிதியின் தமிழ் திரையில் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இவர் உதயன், மௌன குரு, தகராறு, டிமாண்டி காலனி, டி பிளாக், டைரி, தேஜாவு  இதைவிட மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


சமீபத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கும் புதிய திரைப்படத்தின் முதலாவது பார்வை இணையத்தில் வெளியாகி உள்ளது. lyca production மூலம் சுபாஷ்கரன் வழங்கி ஹரிஷ் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள "திருவின் குரல்" என்ற திரைப்படத்தின் முதல் பார்வையே வெளியாகி உள்ளது. 


இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 2023 ல் வெளியாக உள்ள நிலையில் இதற்கான முதல் பார்வை  இணையத்தில் வெளியாகி உள்ளது. 


நடிகர் அருள்நிதி வித்யாசமான தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் புகழ் பெற்றவர். இவரின் படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அருள்நிதியின் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இந்த திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement