• May 10 2024

கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் வெடித்த சண்டை... விசாலாட்சியை மிரட்டும் குணசேகரன்... ஜீவானந்தம் மகளுக்கு தாயாக மாறிய ஈஸ்வரி... பரபரப்பான Ethirneechal - Promo..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆதிரைக்கும், கரிகாலனுக்கும், விசாலாட்சிக்கும் இடையில் பயங்கர வாக்குவாதம் நடக்கின்றது. சத்தம் கேட்டு வெளியில் வந்த குணசேகரன் "அங்க என்ன பிரச்சினை  சத்தம் மேல வரைக்கும் கேட்குது" என்கிறார்.


பதிலுக்கு ஆதிரை "நான் தான் பிரச்சினை பண்ணுறேன்" என்கிறார். அதற்கு குணசேகரன் விசாலாட்சியைப் பார்த்து "இந்த வீட்டில் உள்ள பொம்பளைகளுடன் சேர்ந்துக்கிட்டு எனக்கெதிராக ஒரு அடி எடுத்து வைச்சாளாக இருந்திச்சு என்றால் பாரேன் அப்புறம் உனக்கு பொண்ணு இருக்க மாட்டா" என்கிறார்.


மறுபுறம் ஈஸ்வரியிடம் சென்ற ஜீவானந்தத்தின் குழந்தை "நீங்க பாக்கிறதற்கு எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க" எனக் கூறி அழுகின்றது. அதற்கு ஈஸ்வரி "அழக்கூடாது" என ஆறுதல் கூறிக் கன்னத்தை கிள்ளி கட்டியணைத்து அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement