• May 02 2024

சிம்பு நடிக்கவிருந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்-சைலண்டா வேலைய பார்த்துட்டாரு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வானொலி ஒளிபரப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டு இன்று பலரதும் பாராட்டுப் பெற்று வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. தனது நகைச்சுவை நிறைந்த நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 'தீயாய் வேலை செய்யணும் குமாரு, வடகறி, வாயை மூடி பேசவும், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் புதிய படம் தான் வீட்டில விசேஷம். இந்தப் படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கின்றார். மேலும் அவருடன் இணைந்து மறைந்த மூத்த நடிகை கே.ஏ.பி.சி. லலிதா, ஊர்வசி, சத்யராஜ், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றார்கள். இப்படம் பலரதும் வரவேற்பை பெற்ற ஒரு நகைச்சுவை படமாக அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் சிம்பு நடிப்பதாக இருந்த ஒரு படத்தின் உடைய பட வாய்ப்பை ஆர்.ஜே.பாலாஜி சைலண்டாக இருந்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாகவே சங்கரின் மகள் அதிதியுடன் இணைந்து 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது.

இதனால் நடிகர் சிம்புவும் 'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கின்றார். தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அவரது தந்தை டி.ஆர்.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்திருக்கின்றார். மேலும் ஜூலை 10-ஆம் திகதி 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்ள இருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு 'கொரோனா குமார்' படத்தின் கதை பிடிக்கவில்லை எனக் கூறி மறுத்துவிட்டார். இதனால் ஆர்.ஜே.பாலாஜியிடம் கதையைக் கூறி சிம்புவிற்கு பதிலாக அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இப்படத்தினுடைய இயக்குநர். சிம்புவிற்கு பதிலாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருப்பதால் அப்படத்தினுடைய தலைப்பை 'சிங்கப்பூர்' என மாற்றியுள்ளதாகவும், இப்படத்தினுடைய படப்பிடிப்புக்கள் தொடங்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement