• May 01 2024

குளிக்கும் போது புகைப்படம் எடுத்த 'குக்வித் கோமாளி' பிரபலம்... சேலை, தாவணி என்று தொடங்கி கடைசியில இப்படி ஆகிட்டீங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த மாடலாகவும் வலம் வருகிறார். 

சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் இவர் சீரியலில் தான் முதலில் அறிமுகமானார். அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். இதனூடாக இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமும் உருவாகத் தொடங்கியது.


அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'அவளும் நானும்' என்ற தொடரில் மௌனிகா தேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது இதே சேனலில் ஒளிபரப்பான 'செந்தூரப்பூவே' என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.


அத்தோடு விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்றான 'குக் வித் கோமாளி' சீசன் 2 இல் பங்கேற்று  பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் தற்போது சினிமா வாய்ப்புகளையே அதிகளவில் குறிவைத்து வருகிறார்


இதற்கென அவ்வப்போது கவர்ச்சி உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றார். அதில் இவருக்கு ஏராளமான பாலோவர்ஸ் உள்ளனர்.


இந்நிலையில் சேலை, தாவணி என ஆரம்பித்தவர் தற்போது அவற்றிலும் கவர்ச்சியின் எல்லைகளை கடந்துவிட்டார். அந்தவகையில் தற்போது இவர் குளத்தில் நீராடும் போது புகைப்படங்களை எடுத்து அதில் 'நீராடும் வேளையில்' என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement