• May 09 2024

சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை-பிரபல தயாரிப்பாளர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'டான்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் 20-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் அதில், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்ததால் அது சிலருக்கு பிடிக்காமல் போனது. அதனாலேயே அவருக்கு பல வழிகளில் பல பிரச்சனைகளை கொடுத்தனர்.

எனினும் கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது ஆனால் சிவகார்த்திகேயன் விவரமானவர் படித்தவர் அதனால் அதனை நன்றாக ஹேண்டில் செய்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை. இவ்வாறு தயாரிப்பாளர் ரவீந்தர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement