சீரியல் நடிகர் அர்னவ் கைது செய்ப்படப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவியில் கடந்த 2017ம் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் காதல்களாகி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் தான் அர்னவ் மற்றும் திவ்ய ஸ்ரீ. இதில் தற்பொழுது அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலிலும் திவ்யாஸ்ரீ மகராசி சீரியலிலும் நடித்து வருகின்றார்கள்.
அண்மையில் கூட திவ்யா ஸ்ரீ தமது திருமண புகைப்படங்களையும் தான் கர்ப்பமாகி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திவ்யா சில தினங்களுக்கு முன் அர்னவ் தன்னுடைய கர்ப்பத்தை களைப்பதற்காக தன்னுடைய வயிற்றில் அடித்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அழுது கொண்டே வீடியோ போட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டி கொடுத்த அர்னவ் தான் அடிக்கவில்லை என்றும் திவ்யாவுக்கு ஈஸ்வரன் என்பவரோடு தொடர்பிருப்பதாகவும் பேட்டியளித்திருந்தார். இதனால் யார் சொல்வது சரி என்று தெரியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர்.இருவரும்மாறி மாறி பேட்டியளித்தார்கள்.
இவர்களின் சண்டை முடிவில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் திவ்யா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் கர்நாடக மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது.கர்நாடகாவின் தலையீடு இருப்பதால் தமிழக போலீசும் இந்த விவகாரத்தை சீரியஸாக அணுகிறது.விரைவில் அர்ணவ் கைது செய்யப்படுவார் என்று திவ்யாவின் வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!