• May 08 2024

எனக்கு நடந்த விபத்து பெரிது... கை, கால் இல்லாவிட்டாலும் நடிக்கலாம்... விஜய் ஆண்டனியின் தன்னம்பிக்கைப் பேச்சு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 'பிச்சைக்காரன் 2' படம் தயாராகி வருகின்றது. ஏற்கெனவே இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் ஆவலாக காத்திருந்தனர்.

இந்த சூழலில் இப்படத்தினுடைய படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு பெரும் விபத்து ஏற்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது முன்னதாக மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடைபெற்ற போது படகில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனிக்கு முகத்தில் மிக மோசமான எலும்பு முறிவுகளும் காயங்களும் ஏற்பட்டன. 


இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து வந்திருக்கும் விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தனக்கு நடந்த இந்த விபத்து பெரிது என்றும், அதனால் விபத்துக்கு பிறகு அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது எனவும் கூறினார்.

அத்தோடு முகத்தில் மாற்றங்கள் இருந்தாலும், மக்கள் முக்கியத்துவம் கொடுப்பது தன்னுடைய கதைக்குத்தான். அதற்கு ஏற்றவாறு கதையை நான் தயாரிப்பேன் என கூறிய விஜய் ஆண்டனி, மனிதனுக்கு கை, கால் இல்லாவிட்டாலும் கூட அவனால் படத்தில் நடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது "நான் வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்தவன் அதனால் எந்த ஒரு காயமும் என்னை பெரிதாக காயப்படுத்திவிடாது. விஜய் ஆண்டனி படம் என்றால் முதல் நாள் மட்டும் மக்கள் கூட்டம் வரும், படம் நல்லா இல்லாவிட்டால், பிறகு அடுத்த நாளிலிருந்து கூட்டம் வராது. என் மேல் உள்ள நம்பிக்கையில் முதல் நாள் கூட்டம் வரும், அந்த கூட்டம் தான் என் படத்தை தீர்மானிக்கும்" எனவும் கூறி உள்ளார் விஜய் ஆண்டனி.

Advertisement

Advertisement

Advertisement