• May 19 2024

'விஜய் எப்பவும் ரஜினியை அப்படித்தான் கூப்பிடுவார்' - ஜெயிலர் பிரபலம் கூறிய தகவல் இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர், வரும் 10ம் தேதி வெளியாகிறது. இன்னும் மூன்றே நாட்கள் மட்டுமே உள்ளதால் ஜெயிலர் அட்வான்ஸ் புக்கிங் வேகமெடுத்துள்ளது.

முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார். இந்த டைட்டிலை தான் எப்போதோ வேண்டாம் என சொல்லிவிட்டேன், ஆனாலும் அது என்னவிட்டு போகவில்லை.இதோடு இல்லாமல் 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கலை இயக்குநர் கிரண், ரஜினி குறித்து விஜய் பேசியதை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதாவது லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, தற்செயலாக விஜய்யை சந்தித்துள்ளார் அவர். அப்போது ஜெயிலர் ஷூட்டிங்கும் நடைபெற்று இருந்ததுடன், ரஜினியும் கொரோனா பாதிப்பு முடிந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தாராம்.

அதனை குறிப்பிட்டு ரஜினியின் நலம் குறித்து விசாரித்துள்ளார் விஜய். "தலைவர் எப்படி இருக்கிறார்... ஜெயிலர் ஷூட்டிங்லாம் எப்படி போகுது" என சாஃப்ட்டாக கேட்டுள்ளார். அதாவது "தலைவர்ன்னு தான் சொன்னாரே தவிர, ரஜினி சார்ன்னு கூட விஜய் சொல்லவில்லை" என கிரண் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும், "நெல்சன் யாராக இருந்தாலும் கட்டிப் போட்டுடுவான், அதனால அவன் தலைவரை நல்லா பார்த்துக்குவான்" எனவும் விஜய் கூறினாராம். இதனை மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் ஜெயிலர் கலை இயக்குநர் கிரண்.




Advertisement

Advertisement