• Mar 17 2025

டபுள் மீனிங்கில் பேசிய தம்பி ராமையா! அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் ராஜாகிளி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமனி ராமையா உணர்ச்சிவசமாக பதிலைத்துளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


உமாபதி இயக்கிய இந்த படத்தில் தம்பி ராமையா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் " இது ரியல் தொழிலதிபர் கதையா? அல்லது பிரபல தொழிலதிபர் கொலை வழக்கு காரணமாக தான் வாழ்ந்த ராஜ வாழ்க்கையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர் ஆகும் கதையா" என்று கேட்கிறார். 


இதற்கு தம்பி ராமையா இவ்வாறு பதிலளித்தார் " ஒவ்வொரு படமும் உண்மை சம்பவங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி சில பல கற்பனைகளை கலந்து உருவாக்கப்படும் கதை தான்"  கரு உருவாக வேண்டுமென்றால் எதாவது பண்ணாத்தானே உருவாகும். சும்மா இருந்தா எப்படி கரு உருவாகும்" என டபுள் மீனிங்கில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது பலரையும் ஷாக் ஆக்கியது. மேலும் சமீபத்தில் திருமணமான மகனை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தம்பி ராமையா இப்படியெல்லாம் பேசலாமா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement